கரண் ஜோஹரின் புதிய படத்திலிருந்து பாகிஸ்தான் நடிகர் நீக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் நடிகர்களை இந்திய திரைப்படங்களில் நடிக்க வைப்பது தேசத்துரோகம் என்று சில அடிப்படைவாத கும்பல் மிரட்டியதால் கரண் ஜோஹரின் ஏ தில் ஹே முஷ்கில் படத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
பாகிஸ்தானுடன் பொருளாதார வர்த்தகம் செய்தால் தப்பில்லை, பாகிஸ்தான் நடிகர்கள் நடித்தால் பெருங்குற்றம் என்பதே அந்த கும்பலின் நிலைப்பாடு.
இதன் காரணமாக கரண் ஜோஹர் தனது அடுத்தப் படத்தில் நடிக்க வைப்பதாக இருந்த பாகிஸ்தான் நடிகர் பவத் கானை நீக்கியுள்ளார். அவருக்குப் பதில் சைப் அலிகான் நடிக்கலாம் என்கின்றன பாலிவுட் தகவல்கள்.