அம்பாறை (திஹாமடுல்ல) மாவட்டத்தில் உள்ள மொத்தம் 4 தேர்தல் தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி மூன்று இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு அம்பாறை தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளது. அப்பாறை தொகுதி சிங்கள மக்கள் அதிகமாக வாழும் இடமாகும். ஆனால், முஸ்லிம்கள் கணிசமாக வாழும் கல்முனை, பொத்துவில், மற்றும் சம்மாந்துறை பகுதிகளில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் சேர்ந்து போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
பொத்துவில் மற்றும் கல்முனை தொகுதிகளில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளின்படி, 6 மாவட்டங்களின் முடிவுகள் முழுமையாக வெளிவந்துள்ளன.
அவற்றில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு காலி, அம்பாந்தோட்டை, மாத்தறை ஆகிய மூன்று மாவட்டங்களில் அதிக தொகுதிகளில் கூடுதலான வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கின்றது.
அதேவேளை தமிழர்கள் அதிகமாக வாழும் யாழ்ப்பாண மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி ஆகக்கூடுதலான வாக்குகளை பெற்று முன்னிலை பெற்றுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி மாறாக ஜனாதிபதி மைத்திரியின் மாவட்டமான பொலன்நறுவையில் உள்ள மூன்று தொகுதிகளில் இரண்டில் அதிக வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கிறது.
திருகோணமலை மாவட்டத்தை பொறுத்தவரை அங்குள்ள திருகோணமலை, சேருநுவர மற்றும் மூதூர் ஆகியவற்றில் முறையே இலங்கை தமிழ் அரசுக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன முன்னிலை பெற்றுள்ளன.
திருகோணமலை மூன்று தொகுதிகளும் மூன்று கட்சிகள் வசம்:
========================================
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளையும் வெவ்வேறு கட்சிகள் கைப்பற்றியுள்ளன.
மூவின மக்கள் கணிசமாக வாழும் இந்த மாவட்டத்தில் திருகோணமலை தொகுதியில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், மூதூர் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியும் மற்றும் சேருவில தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் முன்னிலை பெற்றுள்ளன.
திருகோணமலை மாவட்டம் - சேருவில தொகுதி:
===============================
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு -- 22,325 -- 43.79%
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின், பொலன்நறுவை மாவட்டத்தில் மொத்தமுள்ள மூன்று தொகுதிகளில் ஒரு தொகுதியை மாத்திரமே அவருடைய கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வென்றுள்ளது.
அங்கு பொலன்நறுவை மற்றும் மெதிரிகிரிய ஆகிய தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
மின்னேரிய தொகுதியில் மாத்திரமே மைத்திரியின் கட்சி வெற்றிபெற்றுள்ளது.
இலங்கை பொதுத்தேர்தலில், இதுவரை மூன்று மாவட்டங்களில் முழுமையான முடிவுகள் வந்துள்ளன.
அதில் யாழ் மாவட்டத்தில் அனைத்து 11 தொகுதிகளிலும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ( இது மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சொந்த மாவட்டம், ஆனால், அவர் அங்கு போட்டியிடவில்லை) மொத்த 4 இடங்களிலும் அவர் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது.
அதேபோல மாத்தறை மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 தொகுதிகளில், மாத்தறை தொகுதி தவிர அனைத்து தொகுதிகளிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பே முன்னிலை பெற்றுள்ளது.
கட்சிகளுக்கு ஒதுக்கப்படக்கூடிய இடங்களின் எண்ணிக்கை இன்னமும் அறிவிக்கப்படவில்லை.