தற்போது, சென்னையில் தமிழ் திரைப்படத்தின் விளம்பர முன்னோட்ட காட்சிகள் ஆட்டோக்களில் திரையிடப்படுவதுதான் அந்த புதிய யுக்தி. இந்திய நகரங்களில் முதன் முறையாக சென்னையில் இந்த சிறு திரைகள் சுமார் 500 ஆட்டோக்களில் பொருத்தப்பட்டுள்ளன.
கைப்பேசி செயலி (mobile app) போன்ற தொழில்நுட்ப உதவியுடன் இயக்கப்படும் இந்த சிறிய எல்.இ.டி. திரைகள், ஆட்டோ வாகனத்தின் இஞ்சின் இயங்க ஆரம்பித்த 10 வினாடிகளில் தானாக ஒளி மற்றும் ஒலிபரப்பை துவங்கும். ஆட்டோ இஞ்சின் நிறுத்தப்பட்ட 10 வினாடிகளில் தானாக ஒளிப்பரப்புக்களை நிறுத்திக்கொள்ளும்.
மேலும் இதே சேவை சென்னையை தொடர்ந்து அடுத்த 3 மாதங்களில், ஹைதராபாத், பெங்களூரு, மும்பை மற்றும் இலங்கையின் கொழும்பு போன்ற நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்ய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த நிறுவனத்தின் அதிகாரி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.