இந்த நிலையில், பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் வெளியே செல்லவும், உள்ளே செல்லவும் கடுமையான பிரச்சினைகள் உள்ளன. இதைத் தீர்க்க, குத்தம்பாக்கத்தில் குத்தம்பாக்கம் பேருந்து முனையம் கட்டும் பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளது. விரைவில் பூந்தமல்லி பேருந்து நிலையம் அங்கு மாற்றப்படும் என கூறப்படுகிறது.
திருமழிசை அடுத்த குத்தம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ரூ.336 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது அந்த நிலையம் தயாராகி வருகிறது. இந்த பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்தவுடன், சேலம், தர்மபுரி, பெங்களூரு, ஓசூர், காஞ்சிபுரம், திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படும்.
இதனால், சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த பணிகளை விரைவில் முடிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.