இங்கு விஷ முறிவு விநாயகர் கோவில் உள்ளது. இங்குள்ள கிணற்றில் குளித்து அருகில் உள்ள சிவனை தரிசித்தபின், வலப்புறமுள்ள கருப்பணசாமிக்கு உக்கிரம் அதிகம் உள்ளதால் கிரீடம் மட்டும் தெரிகின்றது. வணங்கிய பின் விநாயகரிடம் வந்து நாமே பூஜை செய்யலாம்.
விஷக்கடி விஷங்கள் போகவும், மனிதர்களின் எண்ணத்தால் ஏற்படும் விஷத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் நவக்கிரகங்களால் ஏற்படும் துன்பம் என்னும் விஷமும், செய்வினை வைப்பு, வறுமை, கடன் போன்ற விஷங்களும், எல்லாவிதமான முன்னேற்றங்களில் ஏற்படும் தடைகளும் இவரை வணங்கினால் நீங்கி காரிய சித்தியாகும். சித்தியானவுடன் திருமஞ்சனம் செய்யுங்கள்.