ஆண்கள் கழிப்பறைக்கு இழுத்து சென்று இளம்பெண் பலாத்காரம்

வியாழன், 27 செப்டம்பர் 2018 (16:06 IST)
பெண்களுக்கு எங்கும் பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது. பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக இளம்பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. 
 
சமீபத்தில் தென் ஆப்ரிக்காவில் இது போன்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஆம், உணவக விடுதியில் 17 வயது பெண் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகியுள்ளார். 
 
20 வயது இளைஞர் கழிப்பறைக்கு சென்று கொண்டிருந்த பெண்ணை பின்தொடர்ந்து பலவந்தமாக ஆண்கள் கழிப்பறைக்குள் இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் அதிகாரிடளிடம் புகார் வந்துள்ளது.
 
இதனால், சம்பவ இடத்திற்கு விரைந்து அங்கேயே அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். அந்த இளைஞரிடம் இருந்து போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்