இந்த வழக்கு குறித்து நீதிபதிகள் தெரிவித்தபோது, சமூகத்தின் "ஒழுக்கச் சீரழிவை காட்டுவதாகவும் அந்த மூதாட்டி இந்த அதிர்ச்சிகரமான அனுபவத்தை தனது காஷ்மீர் பயணத்தின் பயங்கரமான நினைவாக வாழ்நாள் முழுவதும் சுமக்க வேண்டியுள்ளதே என்று வேதனை தெரிவித்தனர்.
முன்னதாக, குற்றம் சாட்டப்பட்ட அஹ்மத், தன்னை போலீஸ் தவறாக குற்றம் சாட்டியுள்ளதாக வாதிட்டார். பாதிக்கப்பட்டவர் தன்னை வன்கொடுமை செய்தவர் என்று முறையாக அடையாளம் காணவில்லை என்றும், தான் அதிகாரிகளுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பதாகவும் அவர் வாதிட்டது குறிப்பிடத்தக்கது.
போலீஸ் விசாரணையின்படி அஹ்மத் அந்த மூதாட்டி ஹோட்டல் அறைக்குள் நுழைந்து, ஒரு போர்வையால் அவரது வாயை அடைத்து, வன்கொடுமை செய்துவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.