சவுதி அரேபிய இளவரசருக்கு சவுக்கடி!!

Webdunia
புதன், 2 நவம்பர் 2016 (16:57 IST)
சவுதி அரேபியா நாட்டில் நடக்கும் இஸ்லாமிய சன்னி பிரிவினரின் ஆட்சியில் யாராக இருந்தாலும், இஸ்லாமிய ஷரியத் சட்டங்களின்படி, தண்டனையை அனுபவிக்க வேண்டும்.


 
 
விபரம் வெளியிடப்படாத குற்றத்தை புரிந்ததற்காக சவுதி இளவரசர்களில் ஒருவருக்கு சிறை தண்டனை விதித்தும், சவுக்கடி கொடுக்கவும் ஜெத்தா நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 
 
இதையடுத்து, ஜெத்தா நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளவரசருக்கு சவுக்கடி தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
அவ்வகையில், 1970-ம் ஆண்டு தனது நண்பர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சவுதி இளவரசருக்கு கடந்த மாதம் 19-ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடதக்கது.
அடுத்த கட்டுரையில்