ஆன்லைன் மூலம் குழந்தைகள் விற்பனை!?? – அமெரிக்காவில் சர்ச்சை!

புதன், 15 ஜூலை 2020 (13:29 IST)
அமெரிக்க ஆன்லைன் நிறுவனம் ஒன்று ஆன்லைன் விற்பனை தளங்கள் மூலமாக குழந்தைகளை விற்றதாக வெளியாகியுள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் குழந்தைகள் அதிகமாக கடத்தப்பட்டு அடிமைகளாக விற்கப்படுவதாக வெளியாகியுள்ள புகார்கள் அதிர்ச்சியை அளித்துள்ளன. சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு ஆண்டுக்கு 2 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் கடத்தப்படுவதாக தெரிவித்துள்ளது. இதில் பெரும்பான்மையான குழந்தைகள் அமெரிக்காவில் விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலும் 18க்கும் குறைவான வயதுடைய இந்த குழந்தைகள் அடிமைகளாகவும், பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் பிரபலமான ஷாப்பிங் நிறுவனம் ஒன்றில் சின்ன சின்ன பொருட்கள் அதிகமான விலைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன. இதுகுறித்து சதிகோட்பாட்டாளர்கள் சிலர் பேசிய போது அவை பொருட்கள் அல்ல என்றும் குழந்தைகளின் விலையை அவ்வாறு குறிப்பிட்டு விற்பதாகவும் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள அந்த நிறுவனம் தங்களின் தளத்தில் பொருட்கள் விற்பவர்கள் சிலர் சில சமயங்களில் சிறிய பொருட்களை அதிக விலைக்கு விற்பதாகவும், இதுகுறித்து அந்த பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட விற்பனையாளர்களிடம் இதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்