அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு, தென்கொரியாவின் புசான் நகரில் நடைபெற்றது. நீடித்து வந்த வர்த்தக போரை குறைக்க இந்தச்சந்திப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது.
சந்திப்புக்கு பிறகு பேசிய டிரம்ப், இது "மிகப்பெரிய வெற்றி" என்று குறிப்பிட்டதோடு, சீன பொருட்கள் மீதான வரியை 20% இலிருந்து 10% ஆக குறைப்பதாக அறிவித்தார்.
ஜி ஜின்பிங், "அமெரிக்காவும் சீனாவும் கூட்டாளிகளாகவும் நண்பர்களாகவும் இருக்க வேண்டும்" என்று வலியுறுத்தியதோடு, உலகப் பொருளாதார மேம்பாட்டிற்கு இணைந்து செயல்பட அழைப்பு விடுத்தார்.
பதிலுக்கு சீனா, அமெரிக்காவிலிருந்து உடனடியாக சோயாபீன்ஸ் வாங்க தொடங்கும் என்றும், அரிய வகை மண் ஏற்றுமதி பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டதாகவும் உறுதி அளித்தது.
வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்றும், பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றும் இரு தலைவர்களும் தெரிவித்தனர். இந்த முடிவுகள் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது.