இந்நிலையில், டிரம்ப் வரிவிதிப்பை அரசியலமைப்பிற்கு முரணானது எனக் கூறி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வெளிநாட்டு வர்த்தக ஒப்பந்தங்களை அமெரிக்க காங்கிரஸ்தான் நிர்ணயிக்கவேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆனால் டிரம்ப், அவசரநிலை களஞ்சியச் சட்டத்தை பயன்படுத்தி வரிவிதிப்பு கொண்டு வந்ததாக கூறப்பட்டது. இது சட்டவிரோதமானது எனக் கூறி, அவருடைய உத்தரவை நீதிமன்றம் செல்லாது என அறிவித்தது.
மேலும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர் சூழ்நிலையை தடுத்து நிறுத்தியது தனது வரிவிதிப்பினால்தான் என டிரம்ப் தரப்பு தொடர்ந்து வாதாடியது. ஆனால் இந்தியா இதனை முற்றிலும் மறுத்த நிலையில், தற்போது அமெரிக்க அரசு தரப்பும் இதே கருத்தை நீதிமன்றத்தில் வெளியிட்டுள்ளது. ஆனால், இந்த வாதத்தையும் நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.