சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

Mahendran

திங்கள், 14 ஜூலை 2025 (18:18 IST)
கர்நாடக மாநிலத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் திருமண விருந்து நடந்து கொண்டிருந்தபோது, தனக்கு வைக்கப்பட்ட சிக்கன் பீஸ் சின்னதாக இருக்கிறது என்று கூறி, சிக்கன் பரிமாறியவரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் நடந்த திருமண விழாவில், 30 வயதான வினோத் என்பவர் உணவு பரிமாறிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு நபர் தனக்கு வைக்கப்பட்ட சிக்கன் துண்டு சின்னதாக இருக்கிறது என்று, பரிமாறியவரிடம் கோபப்பட்டார். அவரும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து பரிமாறியவரை சரமாரியாக தாக்கிய நிலையில், ஒரு கட்டத்தில் வினோத்தின் வயிற்றில் கத்தியால் குத்தப்பட்டது. இதனால் படுகாயம் அடைந்த வினோத், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 
இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிந்தவுடன், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கத்தியால் குத்திய நபரையும், அவருடைய நண்பர்களையும் கைது செய்தனர். அனைவரும் குடிபோதையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் காரணமாக மணமக்கள் மற்றும் திருமண வீட்டார் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்