ராஜஸ்தானில் இருந்து ஆந்திர பிரதேசத்தின் திருப்பதிக்கு சென்று கொண்டிருந்த ரயில் திடீரென தீப்பிடித்தது. அதிர்ஷ்டவசமாக, தீ விபத்து ஏற்பட்ட பெட்டிகளில் பயணிகள் யாரும் இல்லாததால், உயிர் சேதம் எதுவும் பதிவாகவில்லை.
இந்த தீ விபத்து காரணமாக பக்கத்து தண்டவாளத்தில் வந்த வந்தே பாரத் ரயில் நிறுத்தப்பட்டு தீ முழுவதும் அணைத்த பிறகு சென்றது, மேலும் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, சேதமடைந்த பெட்டிகள் மேல் விசாரணைக்காக அப்புறப்படுத்தப்பட்டுள்ளன என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.