இந்தச் சூழலில், ஈரானில் உள்ள ஃபோர்டோ (Fordow), நடான்ஸ் (Natanz) மற்றும் இஸ்ஃபஹான் (Isfahan) ஆகிய மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக டிரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
"எங்களது தாக்குதல் வெற்றிகரமாக முடிந்துவிட்டது," என்றும், "எங்கள் அனைத்து விமானங்களும் ஈரான் வான்வழியை விட்டு வெளியேறிவிட்டன," என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "எங்களின் அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக அமெரிக்காவிற்கு திரும்பிவிட்டன," என்றும், "அமெரிக்காவின் சிறந்த போர் வீரர்களுக்கு வாழ்த்துக்கள்," என்றும், தாக்குதலின்போது கவனம் செலுத்திய வீரர்களுக்கு நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார். "உலகில் வேறு எந்த ராணுவமும் இதுபோன்று செய்ததில்லை," என்றும் டிரம்ப் தனது பதிவில் பெருமிதம் தெரிவித்துள்ளார்.