இந்தியாவுக்கு உதவி செய்யதான் முயற்சி பண்றோம்! – சீன விவகாரத்தில் ட்ரம்ப்!

ஞாயிறு, 21 ஜூன் 2020 (10:26 IST)
சீனா – இந்தியா மோதல் விவகாரத்தில் உதவி செய்ய தயாராய் இருப்பதாக அமெரிக்க அதிபட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் லடாக்கில் இந்திய – சீன ராணுவத்தினரிடையே மோதல் எழுந்ததில் இந்திய வீரர்கள் 20 பேரும், சீன வீரர்கள் 34 பேரும் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, அதை தொடர்ந்து இந்தியா – சீனா இடையேயான உறவில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே பாகிஸ்தான் விவகாரத்தில் தலையிட முயர்சித்து வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்த சீன – இந்திய விவகாரத்திலும் தலையிட்டு உதவி செய்வதாக கூறி வருகிறார். ஆனால் ஆரம்பம் தொட்டே இருநாடுகளுக்கிடையேயான பிரச்சினைகளில் அமெரிக்காவின் உதவியை இந்தியா ஏற்றுக்கொள்ளாமல் தன்னிச்சையாகவே செயல்பட்டு வருகிறது.

இதுகுறித்து பேசியுள்ள அதிபர் ட்ரம்ப் ”இந்தியாவும் சீனாவும் கடினமான சூழலில் உள்ளன. பிரச்சினைகளிலிருந்து மீண்டு வர இந்தியாவிடமும் சீனாவிடமும் நாங்கள் பேசி வருகிறோம்” என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்