இன்று அதிகாலை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதி முகாம்களில், இந்தியா அதிரடியாக தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையே பெரும் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் அகமது ஷெரீப் சவுத்ரி கூறுகையில், “இந்தியா மூன்று இடங்களில் கோழைத்தனமான தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் வெட்கக்கேடானது. அவர்கள் பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. பாகிஸ்தான் இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் என்பதை திட்டவட்டமாகக் கூற விரும்புகிறேன்” என்றார்.
இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் கூறுகையில், “பாகிஸ்தானின் ஐந்து இடங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியாவின் இந்த போர் நடவடிக்கைக்கு தக்க பதிலடி பாகிஸ்தான் கொடுக்கும். ஒட்டுமொத்த நாடும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு துணையாக நிற்கும். பாகிஸ்தானுக்கும் நம்முடைய ராணுவத்திற்கும், இந்தியாவை எப்படி கையாளுவது என்று தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.