காபூல் ரஷ்ய தூதரகத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல்! – தூதரக அதிகாரிகள் உட்பட 20 பேர் பலி!

திங்கள், 5 செப்டம்பர் 2022 (15:01 IST)
ஆப்கானிஸ்தானில் ரஷ்ய தூதரகத்தில் நடந்த குண்டு வெடிப்பில் பலர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரமான காபூலில் ரஷ்ய தூதரகம் செயல்பட்டு வருகிறது. இன்று வழக்கம்போல ரஷ்ய தூதரகம் செயல்பட்டு வந்த நிலையில் பலரும் விசா பெற விண்ணப்பிக்க வந்துள்ளனர்.

அப்போது தூதரகம் அருகே பயங்கரவாதி ஒருவன் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில், குண்டு வெடித்து பலரும் சிதறி விழுந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக காயம்பட்டவர்கள் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த தற்கொலைப்படை தாக்குதலில் ரஷ்ய தூதரக அதிகாரி 2 பேர் உட்பட 20 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். இந்த விபத்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அதேசமயம் ஆப்கானிஸ்தான் – ரஷ்யா இடையே புதிய பிரச்சினைகளையும் உருவாக்கக்கூடும் என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்