பேனா தயாரிப்பு நிறுத்தப்படுகிறதா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரெனால்ட்ஸ் நிர்வாகம்..!

ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2023 (16:48 IST)
கடந்த பல ஆண்டுகளாக பேனா தயாரிப்பில் ஈடுபட்ட ரெனால்ட்ஸ் நிறுவனம் பேனா தயாரிப்பை நிறுத்த போவதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த வதந்திக்கு ரெனால்ட் நிர்வாகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.  
 
கடந்த 90 ஆம் ஆண்டுகளின் பள்ளி குழந்தைகளுக்கு ரெனால்ட்ஸ் பேனா வாங்குவது என்பது ஒரு கனவாக இருந்தது. பல ஆண்டுகள் ரெனால்ட்ஸ் நிறுவனம் பல நிறங்களில் பல மாடல்களில் பேனா தயாரித்து உள்ளது என்பதும் குறிப்பாக நீல நிறத்தில் மூடியும் வெள்ளை நிறத்தில் உள்ள பேனா பல ஆண்டுகளாக குழந்தைகளின் மனதில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
1945ஆம் ஆண்டு முதல் பேனா தயாரிப்பில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனம் தற்போது பேனாவின் உபயோகம் குறைந்து விட்டதை அடுத்து பேனா தயாரிப்பை நிறுத்தப் போவதாக கூறப்பட்டது.
 
ஆனால் பேனா தயாரிப்பை நிறுத்தப் போவதில்லை என்றும் முற்றிலும் தவறான தகவல் என்றும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து ரெனால்ட்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது என்ற புள்ளி
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்