கணவரை விட மனைவி அழகு.. மொட்டையடித்து அசிங்கப்படுத்திய குடும்பத்தினர்.. விரக்தியில் கைக்குழந்தையுடன் பெண் தற்கொலை..!

Mahendran

செவ்வாய், 15 ஜூலை 2025 (13:18 IST)
கணவரை விட மனைவி அழகாக இருந்ததால், கணவரின் குடும்பத்தினர் அந்த பெண்ணை துன்புறுத்தியதாகவும், மொட்டை அடித்து அசிங்கப்படுத்தியதாகவும், இதனால் விரக்தி அடைந்த அந்த பெண் தனது ஒன்றரை வயது கைக்குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கேரளாவை சேர்ந்த விபஞ்சிகா மணி என்பவருக்கும் நிதீஷ் என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆன நிலையில், திருமணத்திற்கு பின் ஷார்ஜாவில் குடியேறினர். இந்த நிலையில், கணவர் நிதீஷை விட அவரது மனைவி விபஞ்சிகா அழகாக இருந்ததை பார்த்து பொறாமைப்பட்ட கணவரின் குடும்பத்தினர் விபஞ்சிகாவை துன்புறுத்தியதாகவும், அவரது முடியை வெட்டி அசிங்கப்படுத்தியதாகவும், ஒரு கட்டத்தில் தலையை மொட்டை அடித்து தோற்றத்தை மாற்றியதாகவும் கூறப்படுகிறது. மேலும், "நீ கொண்டு வந்த வரதட்சணை பத்தாது, இன்னும் பணம் வாங்கிட்டு வா" என்று துன்புறுத்தியதாகவும் தெரிகிறது.
 
மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்ட விபஞ்சிகா, தனது ஒன்றரை வயது குழந்தையை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கணவர், அவரது பெற்றோர் மற்றும் சகோதரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
மேலும், தற்கொலைக்கு முன் விபஞ்சிகா எழுதிய கடிதத்தில், தான் கணவர் வீட்டில் அனுபவித்த சித்திரவதைகளை விரிவாக விவரித்துள்ளார். அதில், தனது மாமனார் கூட தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், ஆனால் அதை தனது கணவரிடம் கூறியபோது "தனது தந்தைக்காகவும் சேர்த்துதான் உன்னை திருமணம் செய்து கொண்டேன்" என்று கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். 
 
இந்த நிலையில், நிதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்