இந்தியர் போல் நடித்து மும்பை பெண்ணை திருமணம் செய்ய முயன்ற பாகிஸ்தான் நபர்

வியாழன், 19 ஜூலை 2018 (20:07 IST)
மேட்ரிமோனியல் இணையதளத்தில் தான் ஒரு இந்தியர் என்றும், லண்டனில் டாக்டர் பணி செய்வதாகவும் பாகிஸ்தானை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னை பற்றிய தகவல்களை பதிவு செய்தார்.
 
இதனை உண்மை என நம்பிய மும்பையை சேர்ந்த ஒரு பெண் அந்த இளைஞரிடம் தொடர்பு கொண்டார். இருவரும் போன் மற்றும் இண்டர்நெட் மூலம் அவரவர் தகவல்களை பரிமாறி கொண்டனர். இந்த நிலையில் அந்த இளைஞர் கூறிய தகவல்களில் சந்தேகம் அடைந்த மும்பை பெண், லண்டனில் அவர் குறிப்பிட்டிருந்த மருத்துவமனையை ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு அந்த இளைஞரின் விபரங்களை பெற்றார்.
 
அதன்பின்னர் தான் அந்த இளைஞர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்பதும், அவருக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளது என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அந்த இளைஞரை தொடர்பில் இருந்து நீக்கி கொண்டார்.
 
ஆனால் தன்னை திருமணம் செய்யாவிட்டால் கொலை செய்துவிடுவதாக பாகிஸ்தான் இளைஞர் மிரட்டியதை அடுத்து மும்பை பெண், காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்