நடாஷாவை நாயை போல தூக்கி எறிய வேண்டும்! பெண் ரிப்போர்ட்டரை சாடிய ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

Prasanth K

வியாழன், 26 ஜூன் 2025 (09:16 IST)

ஈரான் - இஸ்ரேல் இடையே போர் தொடங்கி நடந்து வரும் நிலையில், ஈரான் தொடர்ந்து தனது பாலிஸ்டிக் உள்ளிட்ட சக்திவாய்ந்த ஏவுகணைகளை இஸ்ரேல் மீது வீசி தாக்கி வருகிறது. இந்நிலையில் ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கவோ பயன்படுத்தவோ கூடாது என கூறி வந்த அமெரிக்கா, தனது வான் படையை ஏவி ஈரானின் போர்டோவில் உள்ள நிலத்தடி அணுசக்தி நிலையம் உள்ளிட்ட 3 முக்கிய அணுசக்தி தளங்களை தாக்கி அழித்ததாக செய்திகள் வெளியானது.

 

ஆனால் இந்த 3 அணுசக்தி தளங்களும் முற்றிலுமாக அழிக்கப்படவில்லை என்றும், அவற்றை சரிசெய்ய ஈரானுக்கு சில மாதங்களே ஆகும் என்றும் அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளதாக சிஎன்என், நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

 

அதை தொடர்ந்து தனது ட்ரூத் தளத்தில் பதிவிட்ட ட்ரம்ப், சிஎன்என், நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைகளை கடுமையாக சாடியதுடன், மக்கள் பொய் செய்தி பரப்பும் இத்தகைய மீடியாக்களை வெறுப்பதாகவும் கூறியிருந்தார். ஆனாலும் நியூயார்க் டைம்ஸ் தொடர்ந்து இவ்வாறான செய்திகளை வெளியிட்டு வருவதாக தெரிகிறது.

 

இதனால் ஆத்திரமடைந்த ட்ரம்ப் தனது ட்ரூத் பதிவில் “நடாஷா பெர்ட்ராண்டை CNN-ல இருந்து நீக்கணும்! நான் அவங்க ஃபேக் நியூஸ் பண்றத மூணு நாளா பாத்துட்டிருக்கேன். அவங்களை உடனே கண்டிச்சுட்டு, அப்புறம் "நாய் மாதிரி" தூக்கி எறிஞ்சுடணும். அவங்க லேப்டாப்பை திறந்ததுமே பொய் செய்திகள எழுதுறாங்க, இப்போ நியூக்ளியர் சைட்ஸ் ஸ்டோரில பொய் சொன்னாங்க, நம்ம பேட்ரியாட் பைலட்டுகளை அழித்து அவங்களை மோசமா காட்ட முயற்சி பண்றாங்க, ஃபேக் நியூஸ் உருவாக்குற அவங்களை CNN-ல வேலை செய்ய அவங்களை அனுமதிக்கக் கூடாது. ஒரு காலத்துல ஒரு பெரிய நெட்வொர்க்கின் நற்பெயரை அழித்தது அவங்களைப் மாதிரி ஆட்கள்தான். அவங்க ரொம்பவே எதிர்மறையா இருக்காங்க, அதுமட்டுமில்லாம, நிருபரா இருக்கறதுக்கு அவங்களுக்கு எந்த தகுதியும் இல்ல. நடாஷாவை வேலையை விட்டு நீக்குங்க” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்