லெபானான் நாட்டில் பயங்கர வெடிவிபத்து: அதிர்ச்சி புகைப்படங்கள்

புதன், 5 ஆகஸ்ட் 2020 (07:27 IST)
லெபனான் நாட்டின் பெய்ரூட் நகரில் உள்ள துறைமுகத்தில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டதால், து பெய்ரூட் நகரே உருக்குலைந்துள்ளது
 
இந்த வெடிவிபத்து தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவிய வீடியோக்கள் அச்சத்தையும், கவலையையும் அளிப்பதாக உள்ளது
 
இந்த விபத்தில் தற்போது வரை 30 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து இருக்கலாம் என்றும் லெபனான் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
 
இந்த விபத்தை அடுத்து பெய்ரூட் நகரில் 2 நாட்களுக்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விபத்தால் ஏற்பட்ட சேதங்களை கணக்கிடும் பணி மற்றும் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்துவருவதாகவும் லெபனான் அரசு தெரிவித்துள்ளது










வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்