கொரோனாவை ஒழிக்க சிலைக்கு மாஸ்க்! – விநோதம் செய்யும் ஜப்பானியர்கள்!

வியாழன், 17 ஜூன் 2021 (13:25 IST)
உலகம் முழுவதும் கொரோனா பரவியுள்ள நிலையில் கொரோனாவை ஒழிக்க சிலைக்கு ஜப்பானியர்கள் மாஸ்க் அணிவித்துள்ள சம்பவம் வைரலாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பரவியுள்ள நிலையில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நாடுகளும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில் மக்கள் சிலர் கொரோனாவை ஒழிக்க சிறப்பு பூஜைகள் செய்வது போன்ற நம்பிக்கைகளை பின் தொடர்வதும் நடைபெறுகிறது.

இந்நிலையில் ஜப்பான் நாட்டில் கொரோனாவை ஒழிக்க அந்த நாட்டில் உள்ள மிகப்பெரிய புத்தர் சிலைக்கு மாஸ்க் அணிவித்துள்ளனர். 187 அடி உயரம் கொண்ட இந்த சிலையானது 33 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்