இந்திய தூதரகத்திற்கு தீ வைப்பு.. அமெரிக்கா கண்டனம்

செவ்வாய், 4 ஜூலை 2023 (13:32 IST)
அமெரிக்காவில்  காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்திய தூதரகத்திற்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள சான் பிரான்ஸிஸ்கோ நகரில் இந்தியாவின் துணை தூதகரம் இயங்கி வருகிறது.

இத்தூதரகத்திற்கு கடந்த  2 ஆம் தேதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் தீ வைத்ததாக தகவல் வெளியானது. தீ வைப்பு சம்பவ வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவலானது.

அதில், நள்ளிரவில் தூதரகத்தை  நபர் எரிபொருள் ஊற்றி எரித்துள்ளார். இதனால் அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்தது. கடந்த 5 மாதங்களில் இந்திர தூதகரத்தின் மீது நடத்தப்பட்ட 2 வது தாக்குதல் இதுவாகும்.

இந்த செயலை அமெரிக்கா கண்டிப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்