ரஷ்ய அரசு ஊடகங்களுக்கு தடை விதித்த கூகுள்: அதிர்ச்சி தகவல்!

ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (15:38 IST)
ரஷ்ய அரசின் ஊடகங்களுக்கு கூகுள் நிறுவனம் தடை விதித்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த 4 நாட்களாக ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கு இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது என்பதும் இதில் ரஷ்யா உக்ரைன் நாட்டுக்குள் முன்னேறி ஒரு சில நகரங்களை கைப்பற்றி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்நிலையில் ரஷ்ய அரசு ஊடகங்களில் வர்த்தகத்தையும் விளம்பரங்களையும் உலகம் முழுவதும் இணையத்தில் கூகுள் நிறுவனம் தடை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
 
ரஷ்ய அரசு நிறுவனங்கள் தனிநபர்களின் நிறுவனங்கள் iனி கூகுள் மூலம் விளம்பரம் எதையும் செய்ய முடியாது என கூகுள் தெரிவித்துள்ளதால் உலகம் முழுவதும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்