கருவிழி சவரம்; அதிர்ச்சியளிக்கும் சீன மருத்துவம்

வெள்ளி, 29 செப்டம்பர் 2017 (16:17 IST)
சீனாவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கடந்த 40 ஆண்டுகளாக வினோதமான முறையான கருவிழி சவரம் செய்து வருகிறார். 


 

 
சீனாவைச் சேர்ந்த முதியவர் க்சியாங் காவு(62) கடந்த 40 ஆண்டுகளாக கண்களில் சரம் செய்து வருகிறார். இந்த மருத்துவ முறை பெரிதும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இப்படி கருவிழி சவரம் செய்வது மருத்துவமனைகளிலேயே நடைமுறையில் இருந்திருக்கிறது. 
 
இதன் மருத்துவ சிகிச்சை மூலம் ட்ரக்கோமா நோயை குணப்படுத்த முடியும் என்று நம்பப்பட்டு வந்துள்ளது. க்சியாங் காவு என்ற முதியவரிடம் பலரும் கண்களை சவரம் செய்து இருக்கிறார்களாம். குறிப்பாக இந்த கருவிழி சவரம் முறை 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே செய்யப்படுகிறதாம்.
 
இதனால் கண்களில் அழுக்கு சேராமல் பார்வை துல்லியமாக இருக்கும் என கூறப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்