ஒலிம்பிக் கிராமத்தில் தீ விபத்து: வீரர்களின் உடைகள், லேப்டாப் திருட்டு

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2016 (14:41 IST)
இந்த மாதம் 6-ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளது, வீரர்-வீராங்கனைகள் தங்குவதற்காக கட்டப்பட்டு இருக்கும் பணிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை, உரிய வசதிகளும் செய்துகொடுக்கப்படவில்லை.


 


இந்நிலையில், ஒலிம்பிக் கிராமத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தங்கியிருந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது ஆஸ்திரேலிய வீரர்கள் தங்கள் அறைகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். அரை மணி நேரத்திற்கும் மேலாக அவர்கள் வெளியே இருந்தனர். அப்போது, 5-வது தளத்தில் உள்ள அறையில் புகுந்த திருடர்கள் ஆஸ்திரேலிய சைக்கிளிங் அணியின் அதிகாரியின் லேப்டாப், வீரர்களின் உடைகளைத் திருடிச்சென்றுள்ளனர். ஜிகா வைரஸ் தடுப்பு ஆடையையும் திருடர்கள் திருடிச்சென்றனர்.
அடுத்த கட்டுரையில்