அழகில் பேராசை: தங்கைக்கு அக்கா செய்த கொடூர காரியம்!!

வெள்ளி, 7 ஏப்ரல் 2017 (12:00 IST)
ரஷ்யாவில் 17 வயது மாடல் அழகியான தனது தங்கையை அக்காவே கொடுரமாக கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 
 
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் வசித்து வருபவர் ஸ்டெஃபானியா டுப்ரோவினா. 17 வயதான இவர் மாடல் அழகியாக உள்ளார். 
 
தங்கை அழகான மாடலாக இருப்பதை பொறுக்க முடியாமல் பொறாமையில் தங்கையின் கண்களை பிடுங்கியும் காதுகளை அறுத்தும் கொன்றுள்ளார். 
 
இந்நிலையில் அவரை யாரோ கொலை செய்துவிட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
 
பின்னர் விசாரனையில் தனது தங்கையை 3 பேருடன் சேர்ந்து கொன்றதாக அக்கா ஒப்புக்கொண்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்