வடக்கு வாசிரிஸ்தானில் உள்ள மிரன்ஷா-பன்னு சாலையில் பாகிஸ்தான் ராணுவ வாகனங்கள் பயணித்தபோது, ஆயுதங்களுடன் இருந்த குழுவினர் திடீரென தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலால் ராணுவ வாகனங்கள் தீவிரமாக சேதமடைந்துள்ளன. உயிரிழந்த சிப்பாய்களின் எண்ணிக்கை தெரியவில்லை என்றாலும், பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.