கொரோனா பரவல் அதிகரிப்பு: ஜன்னல்களை மூடி வைக்க அறிவுறுத்தல்

வெள்ளி, 10 ஜூன் 2022 (16:58 IST)
கொரனோ வைரஸ் பரவல் அதிகரிப்பு காரணமாக ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரனோ தற்போது மீண்டும் சீனாவில் அதிகரித்து வருகிறது
 
இதனால் சீனா தனது நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் வட கொரியாவில் இருந்து காற்று மூலம் கொரனோ வைரஸ் நோய்கள் பரவக் கூடும் என ஊகிப்பதால் வீட்டின் ஜன்னல்களை மூடி வைக்குமாறு மக்களுக்கு சீனாவின் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்