பாகிஸ்தானில் மத தலைவர் சரமாரியாக சுட்டுக்கொலை

வெள்ளி, 5 அக்டோபர் 2018 (10:29 IST)
பாகிஸ்தானில் மத தலைவர் ஒருவரை மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.
பாகிஸ்தானில் இஸ்மாயில் தர்வேஷ் என்பவர் மத தலைவராக இருந்து வந்தார். இவர் நேற்று தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
 
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர், இஸ்மாயிலை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில் இஸ்மாயில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
 
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இஸ்மாயிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இஸ்மாயிலை சுட்டுக் கொன்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
 
மத தலைவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்