மருமகள் உள்ளிட்ட 10 பேரை 20 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த முதியவர்!

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2016 (12:07 IST)
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் 65 வயதான முதியவர் ஒருவர் தன்னுடைய மருமகள் உள்ளிட்ட தன் உறவினர்கள் 10 பேரை பாலியல் ரீதியாக துன்புறுதியதாகவும், பலாத்காரம் செய்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


 
 
65 வயது முதியவர் ஒருவர் தனது உறவினர் குழந்தைகள் 10 பேரை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து அந்த முதியவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
 
அதில் அவர் தனது அண்ணன் தம்பியின் மகன், மகள்களை தொடர்ந்து 20 வருடங்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் தனது மருமகளை கூட பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார் என்பது உள்ளிட்ட பல அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் அவருக்கு தற்போது 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்