சீனாவில் நிகழந்த மோசமான வாகன விபத்தில் சுமார் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 37 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சீனாவின் ஷான்க்ஸி மாகாணத்தில் உள்ள அதிவிரைவு நெடுஞ்சாலையில் சுமார் 56 வாகனங்கள் விபத்துகுள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், சுமார் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பெரிய, பெரிய லாரிகளும், கண்டெயினர்களும் விபத்துக்குள்ளானதில் மேலும், 37 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்பு பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை.
சீனாவில் மட்டும் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 200,000 பேர் உயிரிழக்கின்றனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.