அடுத்த இரு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் : வானிலை ஆராய்ச்சி மையம்

திங்கள், 17 செப்டம்பர் 2018 (20:24 IST)
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி  நிலவுவதால் வானிலை ஆராய்ச்சி மையம் கடலோர பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்தது.

தமிழகத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மீனவர்கள் மத்திய வங்கக் கடல் மற்றும் ஆந்திர கடல் பகுதிக்கு அடுத்த இரு நாட்களுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்