சூர்யா- சுதா கொங்கரா இடையே பிரச்சனையால் படம் டிராப்பா?

Sinoj

செவ்வாய், 19 மார்ச் 2024 (22:15 IST)
நடிகர் சூர்யா சூரரைப் போற்று படத்திற்குப் பின், இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும்  படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரித்து வந்தது. 
 
சமீபத்தில் வெளியான இப்படத்தின் புரோமோவில்  புறநானூறு என்ற டைட்டில் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது.  
 
இந்த படத்தின் ஷூட்டிங்  இன்னும் தொடங்கப்படா  நிலையில் படத்தைத் தயாரிக்கும் 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்  நேற்றிரவு ஒரு அறிக்கை வெளியிட்டது. 

அதில் “புறநானூறு படத்துக்கு இன்னும் நேரம் தேவைப்படுகிறது. நான் சிறந்ததைக் கொடுக்க கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த படம் எங்கள் மனதுக்கு நெருக்கமானது. விரைவில் படம் தொடங்கப்படும்” எனக் தெரிவித்தனர்.
இந்த நிலையில்,  சுதா கொங்கரா மற்றும் சூர்யா இடையே புற நானூறு பட ஆரம்பத்தில் இருந்தே கருத்துவேறுபாடு நிலவியதாகவும், இருவருக்கும் இடையே ஷூட்டிங் மற்றும் இப்பட தொடக்கத்தில் இருந்து ஏற்பட்ட மோதல் போக்கு தொடர்ந்துவருவதால்தான் இப்படம் டிராப் ஆனதாக கூறப்படுகிறது.
 
சூர்யா, சுதார கொங்கராவின் ஸ்கிரிப்டில் நிறைய கரெக்சன் கூறினாராம்.  இதில் சுதா  கொங்கராவுக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் இதனால்  இருவருக்கும் இடையே இப்பிரச்சனை தொடர்ந்ததாலும் இப்படத்தின் கதையில் தனக்கு திருப்தி இல்லை என்பதாலும் தான் சூர்யா  இப்படத்தில் இருந்து விலகும் நோக்கில் இப்படம் தள்ளி வைக்கப்படுவதாகக் கூறி, இருவரின் ஒத்திசைவோடு ஒரு அறிக்கை வெளியானதாக கூறப்படுகிறது.
 
இன்னொரு தகவலின்படி, அறிக்கையில் கூறியதுபோல் நிச்சயமாக சுதா கொங்கரா இயக்கத்தின் சூர்யா நடிப்பில் புறநானூறு படம் உருவாகும் என்றும் கூறப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்