என்ன ஆனது கீர்த்தி சுரேஷின் கண்ணிவெடி திரைப்படம்?

vinoth

புதன், 24 ஏப்ரல் 2024 (09:59 IST)
தமிழில் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கி வைத்திருக்கும் நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த சாணிக்காயிதம் உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. சமீபத்தில் மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருந்த அவர், அடுத்து இப்போது கண்ணிவெடி என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் கணேஷ் ராஜ் இயக்க, டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ்க்காக எஸ் ஆர் பிரபு தயாரிக்கிறார்.

இந்த படம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது. அப்போதே ஓடிடி உள்ளிட்ட முக்கிய பிஸ்னஸ்களை முடித்தார் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு. ஆனால் இப்போது வரை இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.

இதனால் இந்த படம் ட்ராப் செய்யப்பட்டுவிட்டதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. சமீபகாலமாக தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு பொருளாதார நெருக்கடியில் உள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் அவர் தயாரித்து வந்த ரெயின்போ உள்ளிட்ட படங்களும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்