எதற்கும் துணிந்தவன் டப்பிங்கை முடித்த வினய்!

வெள்ளி, 24 டிசம்பர் 2021 (16:12 IST)
நடிகர் வினய் சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

சூர்யாவின் 40 ஆவது படமான எதற்கும் துணிந்தவன் படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி இமான் இசையமைக்க உள்ளர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கி தற்போது முடிந்துள்ளது. சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க முக்கியமானக் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் டாக்டர் படத்துக்கு பிறகு வினய் நடிக்கிறார்.

படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் இப்போது நடைபெற்று வரும் நிலையில் தன் காட்சிகளுக்கான டப்பிங்கை வினய் முடித்துள்ளார். இது சம்மந்தமாக அவர் இயக்குனர் பாண்டிராஜோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட அது இணையத்தில் கவனத்தை பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்