இந்த படத்தில் விஜய் சேதுபதியோடு ருக்மிணி வசந்த், யோகி பாபு உள்ளிட்டவர்கள் நடிக்க, ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கியிருந்தார். இந்த படத்துக்கு பெரியளவில் விளம்பரங்கள் இல்லாமல் ரிலீஸ் ஆன நிலையில் படுமோசமான வசூலைதான் பெற்றது. இதற்கு படத்தின் மீதெழுந்த எதிர்மறையான விமர்சனங்களும் முக்கியக் காரணமாக அமைந்தன.
இப்போது திரையரங்க வாழ்நாளை இந்த படம் முடித்துக் கொண்டுள்ள நிலையில் தமிழ்நாட்டு வசூலில் தயாரிப்பாளரின் பங்காக சுமார் 2 கோடி ரூபாயை மட்டுமே கொடுத்துள்ளதாம். இதற்கு முன்னர் ரிலீஸான மகாராஜாவின் வசூலோ சுமார் 20 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. சுமார் 10 மடங்கு வீழ்ச்சியை தனது அடுத்த படத்திலேயே சந்தித்துள்ளார் விஜய் சேதுபதி.