தெலுங்கு நடிகர் என் டி ஆரின் மகனான பாலகிருஷ்ணா 60 வயதுக்கு மேலும் கதாநாயகனாக நடித்து வருகிறார். பெரும்பாலான அவரின் படங்கள் தோல்வி அடைந்து கேலி செய்யப்படாலும், அவர் நடிப்பதை விட்ட பாடில்லை. இந்நிலையில் இப்போது அவர் சிவபக்தராக அஹோரியாக நடித்த அகாண்டா திரைப்படம் 2022 ஆம் ஆண்டு வெளியாகி 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து கலக்கியது. இந்த படத்தைப் போயப்பட்டி சீனு இயக்கியிருந்தார்.
இந்த படத்தின் வெற்றியை அடுத்து இதே கூட்டணியில் அகாண்டா பார்ட் 2 உருவாக உள்ளதாக 2022 ஆம் ஆண்டே அறிவிப்பு வெளியானது. அதையடுத்து தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ் வேலைகள் நடந்து வருகின்றன. படம் செப்டம்பர் 25 ஆம் தேதி தசரா பண்டிகையை ஒட்டி ரிலீஸாகவுள்ளது. இதையடுத்து அகாண்டா 2 படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
பனிமலை பிரதேசத்தில் கையில் துப்பாக்கிகளோடு இருக்கும் வில்லன்களை பாலகிருஷ்ணா தன் ஸ்டைலில் மாஸ் ஆக அடித்து துவம்சம் செய்கிறார். கையில் இருக்கும் சூலத்தால் வில்லன்களை குத்தி ரத்தம் தெறிக்க விட மாஸ் ஆக வசனம் பேசுகிறார் பாலகிருஷ்ணா. இதன் மூலம் வழக்கமான அவரது மாஸ் மசாலா படமாக இருக்கும் என்பதைக் காட்டுகிறது.