விஜய் மக்கள் இயக்கத்தினர் ''கொரோனா நிவாரண ''உதவி!

சனி, 4 ஏப்ரல் 2020 (20:34 IST)
சீனாவில் இருந்து பரவியுள்ள கொரோனா வைரஸால் ஒட்டு மொத்த உலக நாடுகளும் பெரும் பொருளாதார இழப்புகளையும், உயிர் பலிகளையும் சந்தித்து வருகின்றன.

கொரோனா பாதிப்பில் இருந்து மக்களைக் காக்க இந்தியாவிலும் வரும் 14 ஆம் தேதிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நரிக்குரவர் இன மக்களுக்கு நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சரவணன் சார்பில் 250 கி.லோ அரிசி மூட்டைகள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.

விஜய் மக்கள் இயக்கத்தின் இந்த உதவிக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்