மீடூவில் சேரமாட்டேன்: விஜய் பட நடிகை பரபரப்பு பேச்சு

திங்கள், 12 நவம்பர் 2018 (09:30 IST)
மீடூவில் தாம் சேர விரும்பவில்லை என்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை எதிர்க்க தம்மிடம் வேறு வழி இருக்கிறது எனவும் நடிகை நித்யாமேனன் கூறியுள்ளார்.
மீடூவில் பெண்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் தாங்கள் சந்தித்து வரும் பாலியல் பிரச்சனைகளை தைரியமாக வெளியே சொல்லி வருகின்றனர். இதில் பல முக்கிய புள்ளிகள் சிக்கி வருகின்றனர்.
இந்நிலையில் ஓகே கண்மணி, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை நித்யா மேனன் மீடூ இயக்கத்தில் சேர எனக்கு விருப்பம் இல்லை என கூறியுள்ளார். அதனால் பாலியல் சீண்டல்களுக்கு ஆதரவளிக்கிறேன் என கருத வேண்டாம். இதற்கு வேறு அணுகுமுறையை கையாள இருக்கிறேன். அதன்மூலம் பலரின் முகத்திரையை கிழித்தெரிவேன் என நித்யா மேனன் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்