டிக்கெட்டுகளை கிழித்த விஜய் ரசிகர்கள்..காரணம் என்ன??

Arun Prasath

வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (16:23 IST)
சென்னையில் நடைபெற்ற பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழா டிக்கெட்டுகளை ரசிகர்கள் கிழித்தனர். இதன் காரணம் என்ன என பார்ப்போம்.

சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற விஜய் நடித்து வெளிவரவுள்ள பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், பல்வேறு நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர், இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

இதனால் தாம்பரம் முதல் சோமங்கலம் வரை 7 கி.மீ. தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் விஜயை காண வந்த ரசிகர்கள் உரிய டிக்கெட் இருந்தும் அரங்கத்திற்கு செல்ல அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும் கூட்ட நெரிசல் காரணமாக மல்லுக்கட்டிய ரசிகர்களை போலீஸார் தடியடி நடத்தினர். அதில் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பத்தாயிரம் இருக்கைகள் மட்டுமே கொண்ட அரங்கத்திற்கு, இருபதாயிரம் டிக்கெட்டுகளை அச்சிட்டு ரசிகர்களுக்கு விநியோகித்துள்ளதாக குற்றம் சாட்டியதால், சில ரசிகர்கள் டிக்கெட்டுகளை கிழித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தை விஜய் கவனத்திற்கு எடுத்து செல்லுமாறு ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்