மெர்சல்' பட பேனர் கட்டிய விஜய் ரசிகர் பரிதாப பலி

புதன், 18 அக்டோபர் 2017 (06:30 IST)
இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய 'மெர்சல்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் நேற்று இரவில் இருந்தே ரசிகர்கள் பேனர்கள், கட்-அவுட்டுக்கள், போஸ்டர்கள் ஆகியவற்றை வைப்பதில் ஈடுபட்டிருந்தனர்



 
 
இந்த நிலையில் காஞ்சிபுரம் வாலாஜாபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில் மெர்சல்' படம் ரிலீஸ் ஆவதை அடுத்து அங்கு விஜய் ரசிகர் மன்றத்தினர் பேனர் வைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.
 
அப்போது 14 வயது சிறுவன் ஒருவன் சுவர் மீது ஏறி விஜய் பேனர்களை கட்டினான். அப்போது கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக ஈரமாக இருந்த சுவர் இடிந்து விழுந்தது. இதனால் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய லோகேஸ்வரன் என்ற அந்த சிறுவன் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 'மெர்சல்' படம் வெளியாகவுள்ள நிலையில் விஜய் ரசிகர் ஒருவர் உயிரிழந்தது அந்த பகுதியை சோகமயமாக்கியது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்