யார் சொன்னது மெர்சல் 3 நாட்களுக்கு பிறகே வெளியிடுவோம் என்று?- தமிழ் ராக்கர்ஸ் நக்கல்

செவ்வாய், 17 அக்டோபர் 2017 (13:17 IST)
விஜய் நடிப்பில் மெர்சல் படம் நாளை வெளியாக உள்ளது. தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் சமந்தா,காஜல், நித்யா மேனன் நடித்துள்ளனர். அட்லி இயக்கியுள்ள இந்த படத்தின் பாடல்கள் ஏற்கெனவே சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இந்த சூழ்நிலையில் மெர்சல் படத்தை வெளியான 3 நாட்களுக்கு பிறகே இணையத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் கூறியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளிவந்தன. திருட்டு வீடியோ வெளியிடும் இவர்களுக்கு கூட கொஞ்சம் இரக்கம் உள்ளது பாருங்களேன் என்று கிண்டல் மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்தனர்.




இந்த நிலையில் இது தவறான தகவல் என்று தமிழ் ராக்கர்ஸ் சார்பில் டுவிட்டரில் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், 3 நாட்களுக்கு பிறகே மெர்சல் வெளியிடப்படும் என்ற தகவல் தவறானது. முதல் தினத்திலேயே அதுவும் ஹச்டி பிரிண்டில் வெளியிடுவோம் என்றும், சொன்னா செய்வோம் சொன்னதை செய்வோம் என்று பதிவிட்டுள்ளனர். கோடிக்கணக்கில் செலவு செய்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு இவர்கள் மிகப்பெரும் தலைவலியாகவே விளங்குகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்