தன் சொந்த பணத்தில் எல் ஐ சி படத்தை மீண்டும் தொடங்கிகிறாரா விக்னேஷ் சிவன்?

vinoth

செவ்வாய், 16 ஜூலை 2024 (09:30 IST)
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கழ் ப்ரதீப் ரங்கநாதன் எல் ஐ சி என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இதில் எஸ் ஜே சூர்யா, சீமான் மற்றும் க்ரீத்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றன. லலித்குமார் தயாரிக்கிறார் இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.

முதலில் ப்ரதீப் சம்மந்தமான காட்சிகளை படமாக்கிய விக்னேஷ் சிவன் அதன் பின்னர் எஸ் ஜே சூர்யா நடித்த காட்சிகளைப் படமாக்கினார். அடுத்து சிங்கப்பூர் சென்று சில முக்கியக் காட்சிகளை படமாக்கி வந்தார். இந்நிலையில் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த ரவி வர்மன் தற்போது இந்த படத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படமே இப்போதைக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம் சமீபகாலமாக ஓடிடி மற்றும் சேட்டிலைட் வியாபாரம் பெருமளவில் குறைந்துள்ள நிலையில் படத்தின் பட்ஜெட்டை வைத்து போட்ட பணத்தை எடுக்க முடியாது என்பதுதான் காரணம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தை முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனே தன்னுடைய பணத்தைப் போட்டு மீதமுள்ள படத்தைத் தயாரிக்கும் முடிவில் இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்