இதனால் அவரது ரசிகர்கள் இரண்டாண்டுகள் தங்கள் ஆதர்ச நாயகனை திரையில் பார்க்க முடியாத ஏக்கத்தை இன்று கொண்டாடித் தணித்துக் கொண்டுள்ளனர். தற்போது தமிழ்நாட்டில் முதல் காட்சி முடிந்துள்ள நிலையில் ரசிகர்கள் படம் பார்த்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதுவரை நேர்மறையான விமர்சனங்களே அதிகமாக வந்துகொண்டு இருக்கின்றன. படம் ரிலீஸாகும் நாளில் அஜித் போர்ச்சுகலில் ரேஸ் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.