சூர்யா படம் பின்வாங்கிய தேதியில் ரிலீஸ் ஆகும் விஷால் படம்!

Webdunia
செவ்வாய், 25 ஜனவரி 2022 (10:21 IST)
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரிலீஸ் ஆகவேண்டிய தேதியில் விஷாலின் வீரமே வாகை சூடும் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்த பிப்ரவரி 4ஆம் தேதி விஷாலின் வீரமே வாகை சூடும் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆக இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 
 
விஷால் ஜோடியாக டிம்பிள் ஹையாத்தி நடித்துள்ள இந்த படத்தில் யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும், இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்