சுந்தர் சி வடிவேலு படத்தில் இணைந்த இன்னொரு ஹீரோயின்!

vinoth

செவ்வாய், 30 ஜூலை 2024 (09:00 IST)
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து சுந்தர் சி கலகலப்பு மூன்றாம் பாகத்தை எடுக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் திடீரென்று அந்த படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

அரண்மனை 4 படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு ஏன் ஒரு சிறியப் படம் பண்ணவேண்டும் என சுந்தர் சி யோசிப்பதாகவும், அதனால்தான் இப்போதைக்கு கலகலப்பு 3 படம் கிடப்பில் போடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் சுந்தர் சி அடுத்து இயக்கும் படத்தில் அவரே ஹீரோவாக நடிக்க முடிவெடுத்தூள்ளார்.

மேலும் இந்த படத்தின் மூலம் வடிவேலு சுந்தர் சி காம்பினேஷன் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் தென்காசியில் நடந்துவரும் நிலையில் படத்தில் கதாநாயகியாக நடிக்க ராஷி கண்ணா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்பட்டது. இதையடுத்து இன்னொரு ஹீரோயினாக இப்போது கேத்ரின் தெரேசா ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். இவர் ஏற்கனவே சுந்தர் சி இயக்கத்தில் கலகலப்பு 2 படத்தில் நடித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்