நடிகர் வடிவேலு 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு சினிமாவில் தீவிரமாக நடிக்கவில்லை. இடையில் சில படங்களில் நடித்திருந்தாலும் எதுவும் அவர் பெயர் சொல்லும் படங்களாக அமையவில்லை. இந்நிலையில் தனது வெற்றிப்படமான இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் அந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதில் தொடர்ந்து நடிக்க மறுத்தார். இதனால் அவருக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு போட்டது.
ஆனால் நகைச்சுவையில் இன்னும் அவரால் கம்பேக் கொடுக்கமுடியவில்லை. தற்போது சுந்தர் சி இயக்கத்தில் கேங்கர்ஸ் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் அளித்துள்ள நேர்காணலில் சர்ச்சையான விஷயம் ஒன்றைக் கூறியுள்ளார். அதில் “ஒரு இயக்குனர் கிட்ட எனக்கு ஒரு சம்பவம் நடந்தது. அவர் கொடுத்த காட்சிகளை நான் இம்ப்ரூவ் பண்ணி சொன்னேன். சிரித்துக் கொண்டேக் கேட்டவர் ஒரு கட்டத்தில் பேப்பரில் என்ன இருக்கோ அதை மட்டும் பண்ணுங்க என்றார்.