நாயகி மையப் படங்களில் நடிப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தவர் த்ரிஷா.
அனுஷ்கா, நயன்தாரா போன்றவர்கள் நாயகி மையப் படங்களில் நடித்து நாயகர்களுக்கு இணையாக தங்களின் மதிப்பை உயர்த்திக் கொண்டதையடுத்து, த்ரிஷாவும் நாயகி மையப் படங்களில் நடிக்க முன்வந்தார். அப்படி உருவானதுதான், நாயகி திரைப்படம்.
பேய் படமான இது தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாரானது. தெலுங்குப்பட இயக்குனர் கோவி இயக்கம்.
நாயகியின் தெலுங்குப் பதிப்பு வெளியாகியுள்ளது. த்ரிஷா எதிர்பார்த்த வரவேற்பு படத்துக்கு இல்லை. தமிழில் கபாலிக்குப் பிறகு வெளியிட இருக்கிறார்கள். தமிழில் நாயகி வசூலிப்பாள் என்ற நம்பிக்கை த்ரிஷாவுக்கு போயே போச்.
ஐரணி என்னவென்றால், த்ரிஷா தற்போது நடித்துவரும் மோகினி திரைப்படமும் நாயகி போன்றே, த்ரிஷா வை மையப்படுத்திய பேய் கதைதான்.